Monday, June 7, 2010

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

பாடல் : சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

படம் : மைக்கேல் மதன காம ராஜன்
பாடியவர்கள் : கமல்ஹாசன் & எஸ். ஜானகி
எழுதியவர் : வாலி
இசை : இசைஞானி

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்

1. ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும்
மோகன ராகம் நின் தேகம், கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ? – நீ……..- சுந்தரன் நீயும்

2. சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்ஙள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாரம்,
உலரி வரையில் நம்முட யோகம் – ஆ…- சுந்தரி நீயும்

பாட்டெங்கும் மலையாள வாசம் வீசும் இந்தப் பாடல் ஆரம்பத்தில் Prelude-ன் முன் ஒலிக்கும் Drums Rhtyhm-ஐ கவனியுங்கள். முதல் முறை கேட்ட பொழுது என் சிற்றறிவுக்கு கொஞ்சமும் பிடிபடவில்லை. இது நாலா? எட்டா? பதினாறா? உலகின் எந்த Sampler-லும் இப்படி ஒரு Pattern இருக்குமா என்று தெரியவில்லை. அதனோடு சேர்த்து Chorus Voices!! அந்த Chorus Voices முடிந்த அடுத்த Bar-ல் Rhythm Pattern மாறுவது, இசைஞானி மட்டுமே நிகழ்த்தக் கூடிய ஒரு அற்புதம்.

இப்பொழுது முதலாவது BGM (Interlude). முதல் நான்கு Bar-க்கு ஒரு Instrument-ல் ஒரு Bit (Keyboard என்று நினைக்கிறேன்) இசைத்து, பின் அடுத்த நான்கு Bar-களுக்கு முதலில் வந்த Keyboard Bit தொடர்ந்து வர, அதன் மேல் மெல்லிய வயலின்களின் Harmony.. பின் அடுத்த நான்கு Bar-களுக்கு முதலில் வந்த Keyboard Bit-ம், பின்னர் வந்த வயலின் Harmony-ம் தொடர்ந்து வர, அதன் மேல் Female Chorus.. இவ்வளவு நுட்பமும் இசைஞானி ஒருவர் மட்டுமே ஆட இயலும் ஒரு இசைத்தாண்டவம்.

சரணத்தில், ‘ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும்’ என்ற வரி முடிந்தவுடன் கேட்கும் ஒரு மெல்லிய ‘தண்டல்’ ஒலியைக் கேளுங்கள். ஒரு பாலக்காட்டு ஐயர் ஜோடி பாடும் பாடலின் Situation-க்கு தகுந்த Instrument-ஐ Select செய்து பிரயோகித்தது, டெண்டுல்கர் போல இசைஞானி அநாயசமாக ஆடிய ஒரு Elegant Cover Drive.

இந்தப் பாடல் ‘கேதார’ ராகத்தில் அமைந்திருப்பதாக ஒரு வலைப்பூவில் படித்த ஞாபகம் (தவறாயிருந்தால் Carnatic தெரிந்தவர்கள் விளக்கவும்).

இந்தப் பாடலைப் பாடிய திரு. கமல்ஹாசன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் அரவிந்த் உடனான பேட்டியில், இந்தப் பாடல் பதிவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறும்பொழுது,

“முதல்ல நானும், சிங்கிதம் சீனிவாசராவும் ராஜா சாரிடம் கேட்டது ‘மார்கழித் திங்கள்’ அந்த மாதிரி ஒரு Tune-தான். அதுதான் ஓ.கே ஆகியிருந்தது. Lyrics எல்லாம் எழுதியபின்பு ராஜா அதில் ஒரு சின்ன மாற்றம் செய்தார். நாங்கள் கூட ‘எதற்கு மாற்றம் செய்கிறார்? அப்படியே ஆயிரம் வருஷத்து Tune இருந்து விட்டுப் போகட்டுமே’? என்றுதான் நினைத்தோம். ஆனால் Modern-ஆக ரொம்ப பெரிய Hit ஆக்கிவிட்டார். நான் பாடுவது கூட Last Minute-ல என்னை பாட வைத்தார். இந்தப் பாடல் Track Recording இல்லை. Live Orchestra-வுடன் record செய்யப்பட்டது. Recording முடிந்து வெளியே வந்து ‘ஹிட்டு Song’ அப்படின்னு வேற யாரோ போட்ட பாட்டு மாதிரி சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போய்விட்டார். அதற்குப் பின் தான் ஐயோ இவ்வளவு நல்ல பாடலை ஒழுங்காக எடுக்க வேண்டுமே என்று எங்களுக்கு Tension ஆரம்பம் ஆகி விட்டது” என்று கூறினார்.

இதைப் போன்ற பாடல்களைக் கேட்கும் பொழுது எல்லாம் எனக்குத் தோன்றுவது, ‘கடவுளே! ஒரு மனிதனின் மூளைக்குள் எப்படி இவ்வளவு ஞானத்தைத் திணித்தாய்?’ என்பதுதான்.

No comments:

Post a Comment