Monday, June 7, 2010

நினைவோ ஒரு பறவை

பாடல் : நினைவோ ஒரு பறவை

படம் : சிகப்பு ரோஜாக்கள்
பாடியவர்கள் : கமல்ஹாசன், எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

1. ரோஜாக்களில் பன்னீர் துளி
வடிகின்றதேன்? அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்?
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன் – நினைவோ

2. பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ?
நீதான் இனி நான் தான் - நினைவோ

ஒரு மெல்லிய Female Humming-உடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் அழகு என்னைப் பொருத்த வரையில் பாடலுடன் பயணிக்கும் Soft Rhythm. Manual Drums-ன் அழகைப் புரிந்து கொள்ள இந்தப் பாடல் ஒன்று போதும். Electronic Rhythm Pad-களின் ஓசையில் இல்லாத ஒரு ஜீவன், இந்தப் பாடலில் ஒலிக்கும் மெல்லிய Manual Drums-லும், ஒவ்வொரு Bar-ன் முடிவிலும் ஒலிக்கும் அதனினும் மெல்லிய மணியோசையிலும் இருக்கும். பொதுவாக பாடலின் பின்னால் Violin-களை தெளித்து அழகு சேர்க்கும் இசைஞானி இந்தப் பாடலில் சற்று வித்தியாசமாக உச்ச ஸ்தாயியில் “பா… ப.. ப.. ப. பா..ப…பா” என்று ஒரு Humming சேர்த்து அழகூட்டியிருப்பார். நன்றாகக் கவனியுங்கள். அந்த Humming-ம் கூட “நினைவோ ஒரு பறவை” என்ற வரியில் “பறவை” என்ற சொல்லில் ஆரம்பிக்கும். அப்படியே ஒரு பறவை சிறகை விரித்து பறக்கத் துவங்குவது போன்ற ஒரு உணர்வு இதில் ஏற்படும். அப்படியே அந்த Humming பறவை சிறகடித்து வானில் மெலிதாகப் பறந்து உச்ச ஸ்தாயிக்கு சென்று, “பறக்கும் அது கலக்கும் தன் உறவை” என்ற வரிகளில் மெதுவாக கீழிறங்கி அழகாக Land ஆகி விடும்.

இந்தப் பாடலைப் பாடிய திரு. கமல்ஹாசன் அவர்கள் இந்தப் பாடலைத் தான் பாடியதைக் குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது:-

“Cinema Express Function-ல் ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, தலைகீழாகக் கூட நிற்கத் தயாராக இருந்தேன். ஆனால் Audience-க்கு முகம் சரியாகத் தெரியாமல் போய் விடும் என்று அதை Try பண்ணவில்லை. அப்பொழுது English பாட்டு பாடலாமே என்று யோசித்து, “One is the Lonliest Number” என்று ஒரு பாட்டு உண்டு. அதை உச்ச ஸ்தாயியில் கத்தி விடலாம். பிசிறானால் கூட English-காரன் பாட்டு இப்பிடிதான் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன்”. (இந்தப் பாடலைக் கேட்க விரும்புபவர்கள் Youtube-ல் ‘One is the lonliest number” search பண்ணவும் அல்லது http://www.youtube.com/watch?v=pUlw3ACdN5s என்ற முகவரியில் இந்தப் பாடல் இருக்கிறது). அதை அந்த Function-ல் பாடி விட்டேன். முன்னாடி ராஜா உட்கார்ந்திருக்கிறார். அது தெரியாமல் பாடி விட்டேன். அடுத்த நாள் Recording Theatre-ல் ‘என்ன நேத்து என்னமோ பாட்டெல்லாம் பாடினீங்க?” என்று கேட்டார். “ஐயைய்யோ சார்! நீங்க கேட்டீங்களா?” என்றேன். “ஆமா! நல்லாயிருந்திச்சி! இந்தப் பாட்டில அதே மாதிரி ஒரு Part வருது! அதப் பாடுங்க.. அப்பிடியே பாட்டையும் பாடிடலாம் இல்ல?” என்றார். அதில் வந்ததுதான் நான் பாடினது. “உங்களுக்கு என்ன வருமோ அதைப் பாடுங்கள்”, என்றார். “சார்! சார்! வேண்டாம் சார்!” என்றேன். “நேத்து நீங்க பாடின மாதிரியே இதில ஒண்ணு போட்டிருக்கேன். பாடுங்க!” என்றார். அதுதான் பாடலின் கூட வரும் “பா… ப.. ப.. ப. பா..ப…பா Humming” என்றார்.

ஊரை விட்டு எங்காவது தொலை தூர பயணம் செல்லும்பொழுது பஸ்ஸிலோ, இரயிலிலோ ஜன்னல் அருகில் அமர்ந்து குறைந்த Volume-ல் உங்கள் Walkman-லோ, CD Player-லோ இந்தப் பாடலைக் கேளுங்கள். அந்த சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது. இசை மேதைகள், இசை அறிவாளிகள், இசை வல்லுனர்கள், இசைக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் “இசைஞானி” என்று ஏன் அவர் அழைக்கப் பெறுகிறார்? ஞானம் என்பது இறைவனிடம் இருந்து வருவது. தனக்கு மிகவும் பிரியமான ஒருவனுக்கு இறைவன் விரும்பி அளிப்பது. அந்த ஞானம் நிறையப்பெற்ற இசையமைப்பாளர் “இசைஞானி” ஒருவரே.

4 comments: