Monday, June 7, 2010

பாடு நிலாவே

பாடல் : பாடு நிலாவே

படம் : உதய கீதம்
பாடியவர்கள் : எஸ்.பி.பி, ஜானகி
எழுதியவர் : மு. மேத்தா.
இசை : இசைஞானி

பாடு நிலாவே! தேன் கவிதை, பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே! தேன் கவிதை, பூ மலர

1. நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் ஒன்றாக ஊர்கோலமோ?
என் வீடு வாராமல் ஏன் கோபமோ?
கைதானபோதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளே போதும்
என் ஜென்மமே ஈடேறவே!

பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே

2. ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர தூண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே!

பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே

திருமதி. எஸ். ஜானகியின் “ஆ.ஆ…” Humming உடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் என் சிறு வயது ஞாபகம் வந்து போகும். நான் School-ல் படித்துக் கொண்டிருந்த போது வந்த படம் இது. அப்பா அம்மாவுடன் நான் Theatre-க்கு சென்று பார்த்த முதல் படம். இசைஞானியின் இசை அறிமுகம் இந்தக் காலகட்டங்களில் தான் எனக்கு ஏற்பட்டது. படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த சில நாட்களில், Radio-வில் இந்தப் பாடலை ஒலிபரப்பும் முன் அறிவிப்பாளர் “அடுத்த பாடல் உதய கீதம் படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது’ என்று கூற, விஷயம் தெரியாத நான் ‘என்னப்பா? Mohan-ம், Revathy-யும் தானே பாடுவாங்க! ஏன் வேற பெயர்களை சொல்றாங்க?” என்று அப்பாவிடம் அப்பாவியாகக் கேட்க, அவர் “இல்லடா! அவங்க வாயசைப்பாங்க! இதை actual-ஆ பாடினது எஸ்.பி.பி-யும், ஜானகியும் தான்” என்று விளக்கம் சொன்ன ஞாபகம். மனிதர்கள் மட்டுமே அழுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்தப் பாடலின் “ஆ…ஆ…” Humming-க்குப் பின் வரும் Violin Piece-ஐக் கேளுங்கள். இசைஞானி கொடுத்த Notation-ஐப் பார்த்து Violinist இந்த Piece-ஐ இசைத்திருப்பார். மன்னிக்கவும். அழுது இருப்பார். அப்படி ஒரு சோகத்தை அந்த Violin இசை நமக்குச் சொல்லும்.

எஸ்.பி.பி அவர்கள் சமீபத்தில் கலைஞர் டிவியின் ‘வானம்பாடி’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பற்றிக் கூறும்பொழுது:-

“இந்தப் பாடலில் அவர் (இசைஞானி) செய்த Experimentation-ஐ எத்தனை பேர் கண்டு பிடித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சின்ன காந்தாரம், ஒரு சின்ன தைவதம் வைத்து, அந்த தைவதம் கூட Lower Octave-ல் use பண்ணும்போது ஒருவிதமாக இருக்கிறது. மேலே use பண்ணும் பொழுது ஒருவிதமாக இருக்கிறது. பெரிய காந்தாரத்தில் இருந்து, சின்ன காந்தாரத்திற்கு வரும்பொழுது அந்த Colour மாற்றம்… வேறு யாரும் கையாள முடியாது. அது மட்டுமில்லாமல் 3rd BGM-ல் ஒரு கிரஹபேதம்.. ஒரு Modulation கொண்டு வந்து இரண்டு Bar-க்குள் Original Scale-க்கு கொண்டு வந்து விடுவார். ரொம்ப Easy-ஆ இருக்கும் Explain பண்ணுவதற்கு. அவர் சிரமம் கூட படவில்லை. C Sharp போய், உடனடியாக, வேற ராகத்தில் இருந்து within two bars, நமக்கு ஒரு confusion கூட இல்லாமல், அந்த Chord, Correct-ஆக சரணம் பாடுவதற்கு.. என்ன மாதிரி Experimentation அது? ச..ரி..க..ப…த…ச… மோகன ராகத்தில், ‘உன் பாடலை நான் கேட்கிறேன்’ இந்த இடத்தில் .. ஒரு காந்தாரம் ஒரு தைவதம் இரண்டு Note add பண்ணிக்கொண்டு, பாட்டு Colour-ஐயே Change பண்ணி விடுவார். எந்தவிதமான Classical Expertise இருந்தாலும் கூட இப்படி compose பண்ண முடியாது என்று நான் உறுதியாக சொல்கிறேன். ஒரு Pandit கேட்டார் என்றால், உட்கார்ந்து Answer பண்ணக்கூடிய தகுதி இருக்கக்கூடிய Music Director-தான் Music Director. அதுதான் இளையராஜா. I feel very proud to talk about him” என்கிறார்.

சத்தியமாக எஸ்.பி.பி அவர்கள் விளக்கியதில் எனக்கு “இரண்டு Bar-க்குள் Original Scale-க்கு வருவதைத்” தவிர மீதி விளங்கவில்லை என்றாலும் ஒன்று மட்டும் கண்டிப்பாக விளங்கியது. காலங்கள் தாண்டி இதயங்களை வருடப் போகும் உன்னத இசையை உருவாக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஒப்பற்றக் கலைஞன் வாழுகின்ற காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது தான் அது.

No comments:

Post a Comment