Monday, June 7, 2010

ஏரியிலே எலந்த மரம்

பாடல் : ஏரியிலே எலந்த மரம்

படம் : கரையெல்லாம் செண்பகப்பூ
பாடியவர்கள் :
எழுதியவர் : பஞ்சு அருணாசலம்
இசை : இசைஞானி

ச ரி க ம ப த நி ச (2)
தன்னன்ன நாதின தன்னன்னன்னா ….

ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
ஒரு காயும் இல்ல பூவும் இல்ல
ஒன் தங்கச்சி வச்ச மரம்
(வச்ச மரம்) காயும் இல்ல பூவும் இல்ல
ஒன் தங்கச்சி வச்ச மரம்
ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வச்ச மரம்

1. வெள்ளி மலையில தேனருவி!
(தேனருவி! தேனருவி! தேனருவி! தேனருவி)
வேப்ப மரத்தில பூங்குருவி!
(பூங்குருவி! பூங்குருவி! பூங்குருவி! பூங்குருவி!)
வெள்ளி மலையில தேனருவி!
வேப்ப மரத்தில பூங்குருவி!
வாழை எலயில ஓடுற காத்து ஆடுற கூத்து காணலையோ?
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளாம் வேலிகளாம் (2)
செண்டுக மேல வண்டுக வந்து
உண்டது தேன போதையில
ஆனந்தம் தானே போகையில (2) – ஏரியிலே

2. அல்லிக் கொளத்தில தாமரையாம்!
(தாமரையாம்! தாமரையாம்! தாமரையாம்! தாமரையாம்!)
முல்லைக் கொடியில செண்பகமாம்!
(செண்பகமாம்! செண்பகமாம்! செண்பகமாம்! செண்பகமாம்!)
அல்லிக் கொளத்தில தாமரையாம்!
முல்லைக் கொடியில செண்பகமாம்!
தென்ன மரத்தில மாங்கா தேடும்
மடையன் சொன்னா கேட்டுக்கடா!
வளர்ந்து விட்ட வாத்துக்களே,
ஓடுற பக்கம் ஓடுங்களே (2)
வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே (2)

இசைஞானி ரசிகர்களின் Collections-ல் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு பாடல். தொலைக்காட்சிகளிலோ வானொலி அலைவரிசைகளிலோ அதிகம் ஒளி/ஒலிபரப்பப்படாத மிகவும் அபூர்வமான ஒரு பாடல். ஒரு Folk Song-ல் Western Music Harmony புகுத்தினால் அந்தப் பாடலின் அழகும், மண் மணமும் தேயுமா? கண்டிப்பாகத் தேயும் என்று நீங்கள் எண்ணினால் இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தப் படத்தில் Prathap Bothan இசை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வருவார். அந்த ஊரில் இருக்கும் சிறுவர்களை அழைத்து, வயல் வெளியில், Guitar போட்டு பாடுவது போன்ற ஒரு காட்சியமைப்பு. அவர் அந்தச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் முறை, Cassette-லோ அல்லது Audio CD-யிலோ இருக்காது. ‘வச்ச மரம்’ ‘வச்ச மரம் கீழே’ …என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இந்தப் பாடல் ஆரம்பிக்கும். இந்த ஒரு பாடலுக்காகவே இந்தப் படத்தின் DVD எங்காவது கிடைக்காதா என்று நான் இன்று வரை கடை கடையாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சரணத்தில் வரும் ‘பூங்குருவி பூங்குருவி’ Chorus-க்கு இசைஞானி எழுதி இருக்கும் Harmony-க்காகவே அவர் கரங்களைப் பிடித்து முத்தமிடத் தோன்றுகிறது.

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு கங்கை அமரன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது:-
“இந்தப் பாடலில் Rhythm Guitar play பண்ணியது நான்தான். அந்தக் காலகட்டங்களில் maximum எல்லா songs-க்குமே நான் Guitar வாசிச்சிருப்பேன். இந்தப் பாட்டு Bangalore Woodlands Hotel-ல் வைத்து Compose பண்ணியது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் (இந்தப் படத்தின் கதை அவருடையது) Bangalore-ல் Work பண்ணியபோது, நான், பஞ்சு அண்ணன் (திரு. பஞ்சு அருணாசலம்), எல்லோரும் அங்கே சென்று தங்கி இந்தப் படத்தின் பாடல்களை உருவாக்கினோம். அதாவது ஒரு விஷயத்தைக் Create பண்ணும்பொழுது, நாம் ஒரு percent நினைத்தால் அதை Hundred percent ஆக்குவதென்பது ஒரு பெரிய விஷயம். இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு பாடல் ஆராய்ச்சிக்காக அந்த ஊருக்கு வருகிறார். அங்கே வந்து அந்த ஊரில் பாடும் பாடல்களைக் கேட்டு ‘ஐயோ! இவ்வளவு அழகான பாடலா? இவ்வளவு அருமையான Orchestration இருக்கிறதே? இதனுடைய Counterparts எல்லாம் இப்படி இருக்கிறதே?’ என்று நினைக்கக் கூடிய இசை ஆராச்சியாளன் அவன். அவன் அங்கு வரும்பொழுது, அந்த இசை ஆராச்சியாளன் இளையராஜா Mind-க்குள்ள போயிட்டாரு! Recording போகும்வரை எங்களுக்கு முதலில் வரும் ச-ரி-க-ம எல்லாம் தெரியாது. அங்கு சென்ற பிறகு அதை சேர்த்து, அதனுடன் Chorus சேர்த்து, அந்தப் பாடலை காலையில் ஆரம்பித்து ஏறக்குறைய மாலை நான்கு மணிக்கு பதிவு செய்து முடித்தோம். அப்பொழுதெல்லாம் தனித்தனி Tracks கிடையாது. ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்த பாடல்களில் இது ஒன்று. இந்தப் பாடல் எப்படி வரும் என்றே எங்களுக்குத் தெரியாது. முழுக்க முழுக்க Song கேட்கும்பொழுது தான் இளையராஜாவினுடைய கற்பனைகள் தெரிந்தது. Compose பண்ணும்பொழுது இரண்டு Part இருந்தால் எப்பொழுதும் இளையராஜா ஒன்று பாடுவார். ‘நீ இந்தப் Part பாடுடா’ என்று ஒன்றை என்னிடம் கொடுத்து பாடச் சொல்வார். நாங்கள் அதைப் பாடிப் பார்த்து Sounding எப்படி வருகிறதென்று Check பண்ணுவது வழக்கம். இளையராஜாவை பொருத்த வரையில் இந்தப் பாடல் மேடையில் பாடக்கூடிய கலைஞர்களுக்கு ஒரு Practice. ஏனென்றால் ஒருவர் ஒரு Note பாடுவார். மற்றொருவர் வேறொரு Note பாடுவார். இவர் அதைக் கவனிக்கக் கூடாது. இது தனி Meditation. இந்த Route-ல ஒருவர் பூஜை பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். கும்பாபிஷேகத்தில் ஹோம குண்டம் மாதிரி. அவங்க மந்திரத்தை அவங்க Correct-ஆ சொல்லணும். இவங்க மந்திரத்தை இவங்க Correct-ஆ சொல்லணும். அந்த மந்திரத்தை கவனிச்சாங்கன்னா இவங்க மந்திரம் போயிடும். அதைப்போல இந்தப் பாடலைப் பாடுபவர்கள் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட Note-லும் Route-லும் தான் Travel பண்ண வேண்டும். அந்த Time-ல ரொம்பக் கஷ்டம் அது. மறக்க முடியாத ஒரு பாடல்” என்கிறார்.

“ஒரு Folk Song-ல் Western Music-ல் இருக்கும் Harmony-யைப் புகுத்தி, எல்லா Chorus Singers-க்கும் அதை சொல்லிக் கொடுத்து, Practice செய்ய வைத்து, Harmonise செய்து… ஒரு சாதாரணப் பாடலுக்கு எதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும்?”, என்று நினைக்கும்பொழுது ஒரு வலைத்தளத்தில் இசைஞானியைப் பற்றி ஒருவர் இப்படி எழுதியிருந்ததுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ‘That is the Joy of Creation”.

No comments:

Post a Comment