Monday, June 7, 2010

இளைய நிலா பொழிகிறதே

பாடல் : இளைய நிலா பொழிகிறதே

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே (2)

1. வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் - இளைய நிலா

2. முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ?
நீலவானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்?
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்? - இளைய நிலா

இசையார்வமும் தமிழார்வமும் இருக்கும் யாருக்கும் இந்தப் பாடலின் வரிகள் மனப்பாடமாய் இருக்கும். ஒரு இரவு நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து கதாநாயகன் Guitar இசைத்துப் பாடும் இந்தப் பாடலைக் கேட்டு Guitar வாசிக்கப் பழகியவர்கள் ஏராளம் [அதில் நானும் ஒருவன்! ஹி ஹி..:)] Guitar வாசிக்கப் பழகிக் கொண்டு இருக்கும் எவருக்கும் இந்தப் பாடலின் BGM-களை வாசித்து முடிப்பதென்பது ஒரு கனவாகவே இருக்கும். அப்படி வாசிக்க முடிந்து விட்டால் “அடடா நாமும் ஒரு Guitarist!” என்ற ஒரு பூரண உணர்வு வந்து நிறையும். Sampler-களில் இருந்து உருவப்படாத மெல்லிய, Simple-ஆன, ஜீவன் நிறைந்த, செவிக்கும் மனதுக்கும் நிறைவான ஒரு Rhythm Pattern. Rhythm எதுவும் இல்லாமல் பாடலின் துவக்கத்தில் பல்லவியை திரு. எஸ்.பி.பி அவர்கள் பாடும்பொழுது இசைஞானி அமைத்திருக்கும் வெறும் Hollow Guitar Plucking-ன் அழகிற்கு முன், இயந்திரக் கலவையுடன் வரும் எந்த இசைக்கருவியின் இசையும் (ஓசையும்?) நிற்க முடியாது. அதன் பின் பாடல் முழுவதும் வரும் Electric Guitar-ன் Chords accompaniment-ம் கூட, பாடலுடன் பயணிக்கும் செவிகளை உறுத்தாத மெல்லியப் பூங்காற்று. முதல் Interlude ஒரு Guitar piece உடன் ஆரம்பிக்கிறது. பின் ஒரு Flute Bit வருகிறது. இரண்டிற்கும் இடையே Bass Guitar-ல் மூன்றே மூன்று Note-ஐ மட்டும் இசைஞானி அமைத்திருப்பார். அதன் பின் ஒரு Bar-க்கு ஒரு Guitar plucking. ‘இசைக்கோர்வை’ என்ற பதத்திற்கு Dictionary of Music-ல் இந்த இடத்தைக் குறிப்பிடலாம்.

பல்லவி, First Interlude, சரணம் முடிந்து Section Interlude (Guitar Piece) துவங்கும் போது மாறும் Rhythm Pattern-ஐக் கவனியுங்கள். என்ன ஒரு அழகான மாற்றம்? இரண்டாவது சரணத்தில் ‘அழுதிடுமோ அது மழையோ?’ என்ற வரிகளில் ‘அது’ என்ற வார்த்தையில் திரு எஸ்.பி.பி. அவர்களின் சிரிப்பு அவரது Trade Mark. “நீலவானிலே வெள்ளி ஓடைகள், போடுகின்றதே என்ன ஜாடைகள்?” அடடா! ‘வானத்தில் மின்னல் தோன்றுகிறது’ என்ற ஒரு Simple-ஆன Message-ஐ ஒரு கவிஞன் பார்க்கும் அழகே அழகு.

இந்தப் பாடலைப் பாடிய திரு. எஸ்.பி.பி அவர்கள் ஜெயா டி.வி.யின் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சியில் ஒரு முறை இப்படிக் கூறினார் “இது ரொம்ப Difficult Composition! நிறைய பேர் சரணம் பாடிவிட்டு, பல்லவிக்கு வரும்பொழுது வேறு சுருதிக்கே போய் விடுவார்கள்!’ அந்த மாதிரி ராஜா போட்ட ரொம்ப Beautifully composed Song! அவர் ஏற்கெனவே Guitarist-ஆக இருந்ததினால் Recording Theatre-ல் அந்த Background scores எல்லாம் அவர் வாசித்துக் காண்பிக்கும் பொழுது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது” என்றார். பின்னர் உடன் வாசித்த இசைக் கலைஞர்களைப் பார்த்து, “இன்னிக்கி இந்தப் பாடலை நிறைய, 100 முறை கேட்டு நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள். ஆனால் Compose பண்ணும் பொழுதே அவர் (இசைஞானி) வாசித்த விதம் கேட்கும்பொழுதே ரொம்ப அழகாய் இருந்தது!” என்று கூறி, “இந்தப் பாடலின் ஒவ்வொரு Note-ம் ரொம்ப முக்கியம். இந்தப் பாடலை பதிவு செய்ய மொத்தம் 23 Take ஆனது! அவ்வளவு கஷ்டமான பாட்டு” என்று குறிப்பிடுகிறார்.

Guitar வாசிக்கப் பழகிக் கொண்டு இருக்கிறீர்களா? கேட்பவர் வியக்கும் வண்ணம் ஒரு Piece வாசிக்க ஆசையா? எந்த Site-க்கும் போய் எந்த Notations-ம் download பண்ணி, அதைத் தடவித் தடவி Practice பண்ணி, பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டாம். நமக்காக இசைஞானி, உலகத்தின் எந்த guitar tutor-லும் இல்லாத வகையில் இலவசமாக, அற்புதமான Guitar Pieces-ஐ இந்தப் பாடலில் compose செய்து கொடுத்து இருக்கிறார். இந்தப் பாடலின் BGM-களை அட்சர சுத்தமாக வாசித்துப் பழகுங்கள். இசைஞானியின் இந்த அற்புத Composition உங்களுக்கான Very Advanced Exercise. All the Best!

No comments:

Post a Comment