Monday, July 26, 2010

கண்மணி அன்போடு

பாடல் : கண்மணி அன்போடு படம் : குணா
பாடியவர்கள் : கமல்ஹாசன்,
எழுதியவர் :
இசை : இசைஞானி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!
பொன்மணி உன் வீட்டில் செளக்யமா ?
நான் இங்கு செளக்யமே!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது!
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது!

1. உண்டான காயம் எங்கும்
தன்னாலே மாறிப் போன மாயம் என்ன
பொன்மானே? பொன்மானே!
என்ன காயம் ஆனபோதும்,
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே!
என் காதல் என்னவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!
அதையும் தாண்டிப் புனிதமானது!

அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே!
அதுவும் உனக்குப் புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உனக்குப் புரியுமா?

லால லா லாலால லாலலா…

குணாவும், தளபதியும் ஒரே தீபாவளிக்கு வெளிவந்த ஞாபகம் எனக்கு! அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். இசைஞானியின் இசையில் ‘ராக்கம்மா கையத் தட்டு’-வும் ‘கண்மணி அன்போடு’-வும் தமிழக டீக்கடைகளில் போட்டி போட்டுக் கொண்டு சக்கை போடு போட்டன!! படம் வெளிவந்த இதே வருடத்தில் தான் முதல் முறையாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடைமேடைக்கு ஒன்றாக நான்கைந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப் பட்ட நினைவு! தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அதிகம் இல்லாத அந்த நாட்களில், பல நிமிட விளம்பரங்களுக்கு இடையே எப்பொழுதாவது இந்தப் பாடல்களைப் பேருந்து நிலைய தொலைக் காட்சிப் பெட்டிகளில் ஒளிபரப்புவார்கள்.

‘கண்மணி.. அன்போட…’ என்று குணாவின் கரகர குரல் கேட்டவுடன் பேருந்துகளுக்குக் காத்திருக்கும் அனைத்து மாணவர்களும் ஹோ..வென்ற கூக்குரலுடன் திமுதிமுவென்று ஓடிச் சென்று தொலைக்காட்சி முன் கூடிக் கண்டு களித்த நாட்கள் அவை!! ஒரு Girl Next Door சாயல் கொண்ட ‘குணா’-வின் அபிராமி ‘ரோஷினி’, இந்தப் படத்திற்குப் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை! பொதுவாக பாடல்களை Player-ல் ஒலிக்க விட்டு, ஒவ்வொரு வரியாக Pause செய்து செய்து தட்டச்சும் நான், இந்தப் பாடலை ‘கண்மணி’ துவங்கி ‘லாலலா’ வரை கேட்காமலேயே முழுவதுமாக அடித்து முடித்து விட்டேன். பல நூறு முறைக் கேட்டுக் கேட்டு, அப்படி மனதில் பதிந்து விட்டப் பாடல்களுள் ஒன்று இது.

ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் இயக்குனர் சந்தான பாரதி, பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஆகியோர் அந்தப் பாடலின் Situation-ஐ இசைஞானிக்கு விளக்க, அவர் Tune போடும் Composing Session குணா படத்தின் Audio Cassette-ல் இருக்கும் (இது இப்பொழுது கிடைக்கும் குணா Audio CD-க்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை!). அதிலிருந்து ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு முன் உள்ள உரையாடல் கீழே. இதுவரைக் கேட்டிராதவர்கள் வாசித்து (?)  மகிழ்க! .

சந்தானபாரதி: Situation என்னன்னா ஹீரோவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது! இப்போ யாருக்காவது லெட்டர் எழுதணும்னா கூட, இப்போ எனக்கு எழுதணும்னா, நான் எழுதி அவருக்கு சொல்லுவேன். அந்த மாதிரி ஒரு Character!

இசைஞானி: ம்??

சந்தானபாரதி: So அவர் என்ன பண்றார்னா.. காதலிக்கு லெட்டர் எழுதணும்னு ஆசைப்படுறாரு! So காதலிகிட்டயே சொல்லி அவ திருப்பி…

கமல்ஹாசன்: அதாவது கிராமத்தில எழுதப் படிக்கத் தெரியாதவங்க ஒரு ஆளக் கூப்பிட்டு என் மாமனுக்கு லெட்டர் எழுதணும்னு சொல்லுவாங்க! இல்ல என் காதலிக்கு லெட்டர் எழுதணும்னு சொல்லுவாங்க!

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: அத மாதிரி கதாநாயகன் ஒரு தற்குறி! காதலிக்கு லெட்டர் எழுதணும்! படிக்கத் தெரிஞ்ச பொண்ணுங்கிறது அந்த காதலி மட்டும் தான்! அவளுக்கு எழுதுற காதல் கடிதத்தை அவளை விட்டே எழுத சொல்ற மாதிரி ஒரு வித்தியாசமான பாட்டு…

இசைஞானி (ஹார்மோனியத்தில் சுருதி மீட்டுக்கொண்டே): ம்ஹும்ம்?? லெட்டர் எழுதணுமா பாட்டுல? ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ மாதிரி??

எல்லோரும் சிரிக்கின்றனர். இசைஞானி தனது ஹார்மோனியத்தை இசைத்தவாறு பாடத்துவங்குகிறார்.

அன்பே அன்பே! நலம்தானா அன்பே அன்பே!
நலம்தானா அன்பே அன்பே.. தன்னே நன்னே…. ….

கமல்ஹாசன்: சிக்கலான விஷயம்.. இது நல்லா இருக்கு! இன்னொரு இது என்னன்னா இதில அன்பே, நலமா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா, அந்த சாயல் வராம ஒரு யதார்த்தமா..

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: ஒண்ணு ரெண்டு வார்த்த நல்ல தமிழ்ல வரலாம்! ஒரு … படிக்கத் தெரியாதவனுடைய மொழி மாதிரி இருக்கணும்..

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: இசையும் ரொம்ப அலாதியா, அற்புதமான கமகங்களோட இல்லாம, Simple-ஆ இருக்கணும்…

இசைஞானி: ம்! இப்போ ஒரு Character-க்கு ஒரு குணாதிசயம் இருக்கு இல்லையா? அவர் டயலாக் பேசுற … … …

கமல்ஹாசன் (இடைமறித்து): ஆங்.. டயலாக் பேசுற மாதிரி ஆரம்பிச்சி எப்ப பாட்டு ஆரம்பிச்சதுன்னு தெரியாம ஆரம்பிக்கணும். அதாவது நான் இப்ப குணாவா பேசும்பொழுது.. கண்மணி .. அன்போட … காதலன் நான் … எழுதும் …

இசைஞானி: ஓஹோ?

கமல்ஹாசன்: … … .. லெட்டர்! லெட்டர் வேணாம்! லெட்டர்னு சொல்லத் தெரியாது.. கடிதம்…. இல்ல அவனுக்கு எத சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறான் இல்லையா?

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: … ஏன்னா அடுத்தவங்கள எழுத சொல்றது இது.. அதக் கூட ஈசியா மாத்திட்டு கடிதம்.. லெட்டர்… இருக்கட்டும்... கடிதம் போட்டுக்கலாம்..

இசைஞானி: ஒஹோ? (சற்று நேர அமைதிக்குப் பின்) நீங்க மேல ரெக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க!

கமல்ஹாசன்: ஆங்??

இசைஞானி (சிரித்தவாறு): எம் மேல நம்பிக்கை இருக்கு இல்லையா?

கமல்ஹாசன்: நம்பிக்கை இருக்கு! “விக்ரம்”-னு ஒரு பாட்டு! ‘அடுத்த நாளைக்கி வாங்க! பண்ணிக்கலாம்-னு சொன்னீங்க! பெரிய ஹிட் சாங் அது! திடீர்னு அன்னிக்கி மத்யானம் ரெக்கார்டிங்! காலைல என்ன பண்ணப் போறோம்னு தெரியாது! நாலஞ்சு பேர் தான் இருந்தாங்க ஆர்கெஸ்ட்ராவில! அதினால எனக்கு நம்பிக்கை உண்டு!

இசைஞானி: ம்??

சந்தானபாரதி: நேரா ரெக்கார்டிங் தியேட்டர்னா பாடுறதுக்கு யார சொல்லணும்?

இசைஞானி: கமல் சாரே பாடட்டும்! ஏன்னா அந்த characterization-க்கு அவரே பாடிட்டார்னா better-ஆ இருக்கும்!

கமல்ஹாசன் (சிரித்தவாறு): தெரியாத்தனமா விக்ரம் உதாரணம் சொல்லி மாட்டிகிட்டேன். (சிரிக்கிறார் .. மூவரும் சிரிக்கின்றனர்). இல்ல! நல்லா வரணும் பாட்டு! அதினால வேற யாராவது…. … … …

இசைஞானி: அதினால என்ன? இந்தப் பாட்டுக்கு நீங்க நல்லா பாடுவீங்கன்ற நம்பிக்கை எனக்கு… … … எம் மேல நீங்க எவ்வளவு நம்பிக்கை வச்சீங்க இல்ல??? …

கமல்ஹாசன் (சிரித்தவாறு): அது நான் வைக்கலாம்! நியாயமான நம்பிக்கை! என் மேல வைக்கலாமா? (மீண்டும் சிரிக்கிறார்). உங்க மேல நம்பிக்கை வச்சி என்ன நீங்க பாட வச்சீங்கன்னா பாடுறேன்.

இசைஞானி: உங்க மேல இருக்கிற நம்பிக்கைய சொல்லட்டா? Open-ஆ சொல்லட்டா?

கமல்ஹாசன்: சொல்லுங்க!

இசைஞானி: உங்க கிட்ட இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சமாசாரங்கள் எக்கச்சக்கமா இருக்குது! அதெல்லாம் பண்ணாம உங்கள நான் விட மாட்டேன் (சிரிக்கிறார்).

கமல்ஹாசன்: சரி! இவ்வளவு நம்பிக்கையா நீங்க சொல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமா நான்.. … …

இசைஞானி: ஒரு Song.. நீங்க பாடினீங்க பாத்தீங்களா? என்னுடைய மியூசிக்-ல? கவிதாலயா படத்தில? அந்த அளவுக்கு பாலு கூட பாடல!

கமல்ஹாசன் (சிரித்தவாறு): ஐயைய்யோ!

இசைஞானி: அது பாட முடியாது! மத்த Song அவர் பாடலாம்! But Particularly அந்த Song-அ அந்த voice dimension-ஓட பாட முடியாதுங்கிறது என்னுடைய கருத்து! (இதில் எந்த பாடலை இசைஞானி குறிப்பிட்டார் என்று தெரியவில்லை! ‘சிங்காரவேலன்’ படத்தின் ‘போட்டு வைத்தக் காதல் திட்டம்’ பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்) நீங்க ஒரு சகலகலா வல்லவர் என்பது என்னுடைய கருத்து! உங்கள நேரா புகழ்ந்து ….

கமல்ஹாசன் (சிரித்தவாறு): … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல..

இசைஞானி (சிரித்தவாறு): ஆங்!! … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல..இருந்தாலும் உங்களப் பத்திய அபிப்ராயத்த சொல்ல வேண்டிய கடமை இருக்கு எனக்கு! அதினால பயப்படாம நீங்க வர்றீங்க!

இதன் பின்னர் ‘கண்மணி அன்போடு’ பாடல் துவங்கும்! பொதுவாக Prelude - பல்லவி - 1st Interlude – முதல் சரணம் – பல்லவி - 2nd Interlude – இரண்டாவது சரணம் – பல்லவி என்ற Format-ஐ உடைத்து, பத்மஸ்ரீ கமல்ஹாசன் கேட்ட விஷயங்களை மட்டுமே உள்ளடக்கி இந்தப் பாடலை அற்புதமாக உருவாக்கி இருப்பார் இசைஞானி. ‘நான் எழுதும் கடிதமே..’ வரி முடிந்து ‘பொன்மணி உன் வீட்டில்…’ வரி துவங்கும் முன்னால் 2 Bar-க்கு ஒரு சின்ன gap ஒன்று இருக்கும். பொதுவாக இப்படி கிடைக்கும் Gap-களில் Violin-களை இழைத்து அழகு சேர்க்கும் இசைஞானி, இந்த இடத்தில் Guitar-ஐக் குழைத்து மெருகேற்றியிருப்பார். இந்த Guitar, ‘கண்மணி துவங்கி ‘வார்த்தை முட்டுது’ வரை பல்லவி முழுவதும் பின்னாலேயே Bass Guitar Styleல் ஓடி வருவது Exquisite! இது Bass Guitar-தானா அல்லது வேறு ஏதும் Guitar ஒலியா என்று தெரியவில்லை! Violin Orchestration இல்லாமல் இசைஞானி Melody-யா? சரணத்தில் ‘உண்டான காயம் எங்கும்’ துவங்கி ‘தாங்காது செந்தேனே’ வரையில் பாடலின் பின்னால் இசைஞானி முடைந்திருக்கும் Violin Orchestration, செவிகளில் சுகமான முத்தங்களைத் தந்து, மறுபடியும் ‘மனிதர் உணர்ந்து கொள்ள’ துவங்கி சரணம் முடியும் மட்டும் இதயத்தை வருடிச் செல்கிறது. நன்றாகக் கவனித்தால் கலைஞானி பாடும் ‘அபிராமியே தாலாட்டும்….’ பல்லவியில், அபாரமான அலுக்கல்களோ, சங்கதிகளோ இல்லாமல், ரொம்ப வெள்ளந்தியான, Plain-ஆன, அபிராமியைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஒரு innocence, அவரது குரலில் தெரியும். பாடலின் ‘லாலலா’ Climax-லும் கூட இதே அப்பாவித்தனம் நிறைந்த ஒரு குரலில் அவர் பாடியிருப்பார்.

‘D Major’ Scale-ல் ரொம்ப Simple-ஆன Chords progression!! ஏதேனும் Advanced Chords-களை இசைஞானி பாடலில் வேறு எங்கேனும் பயன்படுத்தி இருப்பது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்! பாடலின் ராகம் சங்கராபரணம் [S R2 G3 M1 P D2 N3 S | S N3 D2 P M1 G3 R2 S] (The Raga with Western Flavour) என்கிறது ஒரு தளம்.

பாடல் வெளிவந்து ஏறக்குறைய 20 வருடங்கள் கடந்து விட்ட போதும், இப்பொழுது கேட்டாலும் செவிகளுக்கு Fresh ஆக இருக்கிறது! இசைஞானி ஒரு Inexhaustible Composer என்று அறியப்படுவதில் வியப்பொன்றுமில்லை!

Tuesday, July 13, 2010

பொன் மாலைப் பொழுது

பாடல் : பொன் மாலைப் பொழுது

படம் : நிழல்கள்
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

ஹே ஹோ ஹும்ம் லல்லல்லா!!

பொன் மாலைப் பொழுது!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!
வான மகள் நாணுகிறாள்! வேறு உடை பூணுகிறாள்!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!!

ம்ம்.. ஹே ஹா ஹோ ம்ம்.. ஹும் ஹும்..!!

1. ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ? – இது ஒரு

2. வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒருநாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்! – இது ஒரு

‘மடை திறந்து’, ‘பூங்கதவே தாள் திறவாய்’ போன்ற பல முத்தான பாடல்கள் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்றுள்ளபோதும், ஆயிரம் முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல் ‘பொன்மாலைப் பொழுது’!! கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை!! இந்தப் பாடல் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் தமிழ்த் திரைப்படப் பாடல்களில், ஒரு மாலைப் பொழுதை இவ்வளவு அழகுடன் யாரேனும் வர்ணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மாலைப் பொழுதில் இரை தேடிய பறவைகள் கூட்டுக்குள் வந்து அமர்ந்து ‘கீச் கீச்’ என கொஞ்சும் ஒலியுடன் பாடல் துவங்குகிறது. இப்பொழுது இருக்கும் technology-ஐ உபயோகித்தோ அல்லது Keyboard-ல் ஒரு Key-ஐ அழுத்தியோ, மழலையின் அழுகையில் இருந்து குமரியின் சிரிப்பொலி வரை செயற்கையாக உருவாக்க இயலும். ஆனால் 1980-ல் இசைஞானி எப்படி இந்தக் குருவிகளின் ஒலியை பாடலின் துவக்கத்தில் உருவாக்கி ஒலிக்க விட்டார் என்று புரியவில்லை. பாடலின் Guitar Prelude-ம் கூட இந்தக் குருவிகளின் கீச் கீச்சுக்கு பொருத்தமான பதில் சொல்வது போலத் துவங்கும். Prelude உடன் ஓடி வரும் Tabla Rhythm, Prelude-ன் முடிவில் ஒலிக்கும் Flute Bit-ன் அழகை மெருகேற்ற மெளனித்துப் பின்னர் ‘பொன் மாலைப் பொழுதில்’ மீண்டும் பாடலுடன் ஓடத்துவங்குகிறது. ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது! வான மகள் நாணுகிறாள்! வேறு உடை பூணுகிறாள்!’ இந்த இரு வரிகளில் உள்ள ‘லகர ளகர ழகர’ உச்சரிப்பை எஸ்.பி.பி. அவர்களைப் போல தெளிவாக வேறு யாரேனும் பாடகர்கள் பாட முடியுமா என்பது சந்தேகமே!

முதல் Interlude-ன் துவக்கத்தில் மீண்டும் Rhythm நின்று போய் இசைஞானியின் typical Violin Harmony!! அதன் பின்னர் Flute உடன் மாறி மாறி ஒலிப்பது Accordion-ஆ? தெரியவில்லை! இதே போல இரண்டாவது Interlude-ன் துவக்கத்திலும் முடிவிலும் Rhythm Section-க்கு இசைஞானி எந்த வேலையும் கொடுக்கவில்லை! துவக்கத்தில் இருந்தே ஒரு துள்ளலுடன் பயணிக்கும் பாடல், இரண்டாவது Interlude-ன் முடிவில் இசைஞானி உபயோகித்திருக்கும் Violin Bit-ல் சற்றே சோகமாக நிறம் மாறி பின்னர் suddenly “வானம் எனக்கொரு…” என்று மீண்டும் குதித்தோடத் துவங்குகிறது. பெரிய இசை மேதைகளே எதிர் பார்க்காத அல்லது கணிக்க முடியாத Sweet Surprises-ஐ பாடலின் அங்கங்கு ஒளித்து வைத்து ஒப்பனை செய்யும் இசைஞானியின் இசைப் புலமைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு! இந்த இரண்டாவது Interlude-ல் ஒலிக்கும், Keyboard, Flute, Guitar, ஏகப் பட்ட வயலின்கள் மற்றும் இன்ன பிற String Instruments, Bass Guitar, அதோடு Tabla Rhythm, இவற்றுடன் பறவைகளின் செல்லச் சிணுங்கல்கள் எல்லாம் எவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் கேட்கிறது?!! இந்தப் பாடல் வெளிவந்த பொழுது இதன் Sound Mixing பீத்தோவனின் Symphony-ஐ விடச் சிறப்பாக இருக்கிறது என்று எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் வியந்து குறிப்பிட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பத்மஸ்ரீ எஸ்.பி.பி., கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் சின்னக்குயில் சித்ரா மூவரும் இணைந்து பங்குபெற்ற ‘மெட்டுப் போடு’ என்ற நிகழ்ச்சி ‘Zee தமிழ்’ தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தன்னை இசைஞானியிடம் அறிமுகம் செய்து வைத்ததையும், இசைஞானி Tune சொல்லி, பாடல் எழுத ஒரு நாள் அவகாசம் தந்தும், தாம் அங்கேயே ‘பொன் மாலைப் பொழுதை’ இயற்றிய தருணத்தையும் நினைவுகூர்ந்தார் கவிப்பேரரசு! பின்னர் எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலைப் பாடி முடிக்கவும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், “இந்தப் பொன் மாலைப் பொழுதுக்காக நான் எழுதிய சரணங்கள் மூன்று! இடம் இல்லாத காரணத்தால் அந்த மூன்றாவது சரணம் பாடலில், படத்தில் இடம் பெறவில்லை. அப்படிப் படத்தில் இடம் பெறாத சரணம், என் இதயத்திலும் இவர் (எஸ்.பி.பி) இதயத்திலும் இடம் பெற்றிருக்கிறது. என் அருமை எஸ்.பி.பி. அவர்களே! எனக்காக, இங்கு வந்திருக்கும் தங்கத் தமிழ் உள்ளங்களுக்காக, அந்த மூன்றாவது சரணத்தை இந்த மன்றத்துக்குக் காணிக்கையாக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று வேண்டுகோள் விடுக்க, பத்மஸ்ரீ. எஸ்.பி.பி. அவர்கள் அந்த மூன்றாவது சரணத்தைப் பாடினார்:

3. இரவும் பகலும் யோசிக்கிறேன்!
எனையே தினமும் பூசிக்கிறேன்!
சாலை மனிதரை வாசிக்கிறேன்!
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்!
பேதங்களே வேதங்களா? கூடாது! – இது ஒரு

சரணம் முடிந்தவுடன் கவிப்பேரரசு அவர்கள் “நான் மட்டும் புவியரசனாக இருந்திருந்தால் பாலுவின் எடைக்கு எடை தங்கம் கொடுத்திருப்பேன்! நான் பாவம் கவியரசன்! அதனால் ஒரு தங்கச் சங்கிலி மட்டும் போட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி எஸ்.பி.பி. அவர்களுக்கு தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்து மகிழ்ந்தார்.

பாடலின் ராகம் ‘கேதாரம்’! ‘சகல கலா நிதியே’ என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. இது திரைப்படப் பாடலா அல்லது ஏதேனும் Carnatic கீர்த்தனையா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு ‘பொன் மாலைப் பொழுதின்’ முதல் வரி ஞாபகம் வரும். இரண்டும் ஒரே ராகமா அல்லது என்ன ஒற்றுமை? அதுவும் என் அறிவுக்கு எட்டாத விஷயம்! தெரிந்தவர்கள் விளக்கவும்!

அநேக நேரங்களில் அசிங்கமான அர்த்தம் நிறைந்த பாடல்களை குழந்தைகள் முணுமுணுக்கும் பொழுதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசக் குப்பைகளை அதன் அர்த்த விபரீதம் புரியாமல் அவர்கள் பாடும்பொழுதும், பேரிரைச்சலுடன் புரியாத இசைக்கு அவர்கள் ஆடுவதைப் பார்க்கும் பொழுதும் நம் பிள்ளைகளுக்கு என்ன விதமான Values-ஐ நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு! இன்றைய பரபரப்பான விஞ்ஞான உலகில் நம் குழந்தைகளுக்கு நாம் என்னென்னவோ வாங்கித் தருகிறோம். அவர்களுக்கு எதை எதையோ கற்றுத் தருகிறோம். அதனுடன் சேர்த்து ‘பொன் மாலைப் பொழுது’ போன்ற நல்ல பாடல்களை அவர்கள் கேட்கச் செய்வதும், நல்ல கவிதைகளை அவர்கள் படிக்கத் தூண்டுவதும் நம் கடமை!