Monday, September 6, 2010

பனி விழும் மலர்வனம்

பாடல் : பனி விழும் மலர்வனம்

படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பனி விழும் மலர்வனம்! உன் பார்வை ஒருவரம்!
பனி விழும் மலர்வனம்! உன் பார்வை ஒருவரம்!
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்!
ஹே ஹே! இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்!

1. சேலை மூடும் இளஞ்சோலை,
மாலை சூடும் மலர்மாலை! (2)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்!
ஹே ஹே! இளமையின் கனவுகள், விழியோரம் துளிர்விடும்!
கைகள் இடைதனில் நெளிகையில், இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிறுத்து கண்கள் மூடும்! – பனி விழும்

2. காமன் கோயில் சிறைவாசம்,
காலை எழுந்தால் பரிகாசம்! (2)
தழுவிடும் பொழுதிலே, இடம் மாறும் இதயமே!
ஹே ஹே! வியர்வையின் மழையிலே, பயிராகும் பருவமே!
ஆடும் இலைகளில் வழிகிற, நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம் பாடும்! – பனி விழும்

‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’, ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ போன்ற அற்புதமான பாடல்கள் ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் இடம் பெற்றபோதும், ‘பனி விழும் மலர்வனம்’, இவற்றுள் இருந்து தனித்து ஒளிரும் வைரம். காரணம் இளம் எஸ்.பி.பி.-யின் மிக மெல்லிய குரல் மற்றும் இந்தப் பாடலின் ஆர்ப்பாட்டமற்ற, அரவமற்ற இசையமைப்பு!

மெல்லிய Guitar கிள்ளலுடன் துவங்கும் பல்லவியின் துவக்கத்திலேயே ஒரு யோகா வகுப்பில் அதிகாலை வந்து அமர்ந்து விட்டதைப் போல, மனதில் ஒரு ‘அமைதி’ வந்து நிரம்பும்! இசைக்கருவிகளின் நிறைந்த அலங்காரங்கள் எதுவுமின்றி பல்லவியை ஒரு முறை எஸ்.பி.பி. பாடி ‘தடுமாறும் கனிமரம்’ என்று முடிக்க, அதன் பின்னர் துவங்கும் Guitar Prelude செவிகளுக்கு ஒத்தடம்! பின்னர் மீண்டும் பல்லவியை எஸ்.பி.பி. பாடும்பொழுது, ‘மலர்வனம்’, ‘ஒரு வரம்’ ஆகிய பதங்களின் முடிவில், தாயின் அரவணைப்பிற்கு அழும் குழந்தையின் குரலை ஒத்த ஒரு ஏக்கம் நிறைந்த Violin Bit-ல், இசைஞானியின் Touch!

முதல் Interlude-ல் Rhythm Guitar, Bass Guitar, Violin, Drums, Keyboard, Flute, வீணை, பிற Strings Ensemble-கள் பத்தாதென்று கடைசி 4 Bar-களுக்கு முன் வந்து இணையும் மெல்லிய தபலா, சரணத்தில், ‘இளஞ்சோலை’-யின் பின்னர் வீணை, ‘மலர்மாலை’-யின் பிறகு, புல்லாங்குழல், அடுத்த இரண்டு வரிகளுக்கு Drums-உடன் திருட்டுத்தனமாக வந்து ஒற்றும் Congo (Bongo?), கடைசி இரண்டு வரிகளில் ‘கைகள் இடைதனில்’ நெளியத்துவங்கியதும், எஸ்.பி.பி.யின் உருண்டு நெளியும் குரலுக்கு ஏற்ப Drums தேய்ந்து.. உருட்டப்படும் மிருதங்கம், இவ்வளவு சீரிய வித்தைகளும், வாங்கிய பணத்திற்கு இசையமைக்காமல், இசையைக் காதலிக்கும் ஒரு இசைக் காதலனால் மட்டுமே முடிந்த ஒரு அற்புதம்!!

இரண்டாவது Interlude, Guitar, Flute மற்றும் வயலின்களின் ஜுகல்பந்தி! ஒரு செயலை முழுமையடையச் செய்வதற்கு தமிழில் ‘முத்தாய்ப்பு’ என்கிற அழகான வார்த்தை உண்டு! அந்த வார்த்தைக்கு அர்த்தம், இந்த இரண்டாவது Interlude-ன் முடிவில் ஒலிக்கும் Flute மற்றும் Guitar Bit! (வீணையும் ஒலிக்கிறதோ?)! தொலைக்காட்சியில் ‘ஆதித்யா’, ‘சிரிப்பொலி’ போன்ற சேனல்கள் வராத பட்சத்தில், உங்கள் CD Player-ல் இந்தப் பாடலின் Video-வை Play செய்து, இந்த இரண்டாவது Interlude-க்கு, கார்த்திக்கும், கதாநாயகியும் (இவர் பெயர் என்ன?) இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, இடுப்பை ஆட்டி வளைந்து நெளிந்து போடும் ஆட்டத்தைப் (?) பார்த்தால், புரையேறும் வரை சிரித்து மகிழலாம்!

பாடலை யார் வேண்டுமானாலும் இசைஞானி சொல்கிறபடி பாட முயற்சி எடுக்கலாம், அல்லது பாடலாம்! ஆனால் இரண்டாவது சரணத்தின் இரண்டாம் வரியில், ‘காலை எழுந்தால்’-க்குப் பின்னர் கேட்கும் ஒரு அலட்சியமான Mischievous Giggling-கிற்கு, எஸ்.பி.பி.-யை மட்டுமே அழைத்து வந்து பாட வைக்க வேண்டும்! ‘ஆடும் இலைகளில் வழிகிற, நிலவொளி இருவிழி, மழையில் நனைந்து மகிழும்’.. கவிப்பேரரசின் இந்த வரிகள், ‘லகர’, ‘ளகர’ ழகர’ உச்சரிப்புகள் வராத பாடகர்களுக்கு சிறந்த நாப்பயிற்சி!

‘(இரவில்) எரியும் விளக்கு சிறுத்துக் கண்கள் மூடும், (பின்னர்) காமன் கோயில் சிறைவாசம், (அதன் பின்) காலை எழுந்தால் பரிகாசம்’. ‘காமத்துப் பால்’ சங்கதிகளை, இவ்வளவு கண்ணியமாக, பிற விஷயங்களைக் கேட்பவரின் கற்பனைக்கே விட்டுவிட்ட வரிகளின் நாகரிகம், ‘வாழப்பழத் தோப்பில Volley Ball ஆடலாமா?’ Era-வில் செத்துப்போனது துயரம்!

“முதலில் ‘பனி விழும் மலர்வனம்’ போன்ற ஒரு Composition-க்கு நிகரான ஒரு பாடலைச் சுட்டிக் காட்டுங்கள்! அதன் பின்னர் இசைஞானியை மிஞ்சக் கூடிய ஒரு இசையமைப்பாளரைப் பற்றிப் பேசலாம்”. இது, திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்களின் இந்தப் பாடலைக் குறித்த பார்வை! பாடலின் ராகம் ‘நாட்டை’! ‘கம்பீரநாட்டையா?’ ‘சலநாட்டையா?’ போன்ற அலசல்கள் என்னைப் போன்ற கர்னாடக இசைக் ‘கைநாட்டை’-களுக்கு (கைநாட்டு?) அல்ல என்பதால் இசை நுணுக்கம் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் அலசவும்! அதே போல், D Major Scale-ல் அமைந்த இந்தப் பாடலின் Chords Progression-ஐக் கிளறிய பொழுது, சம்பந்தம் இல்லாமல் தலைகாட்டும் Chord F-ன் அழகு, ‘நாட்டை’-யின் Characteristic Features-களுள் ஒன்றா என்பதைக் குறித்தும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று! D Major Scale-ல் உள்ள இசைஞானியின் வேறு எந்தப் பாடலின் Chords Progression-லும் இந்த அழகான F Chord Shift, இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! இனி Chords Progression:

/D பனி விழும் மலர்வனம்! உன் /D Sus 4 பார்வை ஒருவரம்!
/D பனி விழும் மலர்வனம்! உன் /D M 7 பார்வை ஒருவரம்!
/G இனிவரும் முனிவ /D ரும் தடு /F மாறும் கனிம /D ரம்!
/F ஹே /D ஹே!
/G இனிவரும் முனிவ /D ரும் தடு /F மாறும் கனிம /D ரம்!

1. /D சேலை மூடும் /F இளஞ்சோ /D லை,
/D மாலை சூடும் /F மலர்மா /D லை! (2)
/D இருபது நிலவு /F#m கள் நக /F மெங்கும் ஒளிவி /D டும்!
/F ஹே /F#m ஹே!
/D இளமையின் கனவு /F#m கள், விழி /F யோரம் துளிர்வி /D டும்!
/D Sus 4 (7) கைகள் இடைதனில் நெளிகையில்,
/D Sus 4 (7) இடைவெளி குறைகையில்
எரியும் /G விளக்கு /D சிறுத்து /F கண்கள் மூடும்! – /D பனி விழும்

Keyboard Chords, இணைக்கப் பட்டுள்ளன. கொஞ்ச நாள் முன் வரை ‘பார்வை ஒரு வரம்’ பகுதியில் G Chord Apply செய்து கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் Suspended Chords-களின் Theory குறித்தும், அழகு குறித்தும் கொஞ்சம் தெரிய வந்தது! (நன்றி! இனிய நண்பர் இசையமைப்பாளர் திரு. ப்ரஷான் ஜெயதீபம் அவர்கள்). ‘பார்வை ஒரு வரத்தில்’ D Sus 4-ன் application அவ்வளவு துல்லியம், ரம்மியம்!!

இப்படி இசைஞானியின் எந்தப் பாடலிலும் உள்ள Chords Application-ஐ நோண்டிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் Advanced Chords புலப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஏனெனில் இப்படிப்பட்ட Composition-களைக் கேட்டால், இனிவரும் எந்த இசை மேதையும் தடுமாறும் கனிமரம்தான் இசைஞானி!

No comments:

Post a Comment